×

டெங்கு பாதித்த மேலும் 4பேர் சிகிச்சைக்கு அனுமதி

சேலம், நவ.16: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள்ளதால், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சளி காய்ச்சல் பாதிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பரிசோதனை முடிவின் படி, புதிதாக 4பேருக்கு டெங்கு பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post டெங்கு பாதித்த மேலும் 4பேர் சிகிச்சைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Salem district.… ,Dinakaran ,
× RELATED பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை